என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் மீது நடந்த தாக்குதல் பாதுகாப்பு நடவடிக்கை: நிதி மந்திரி ஜெட்லி
Byமாலை மலர்29 Sep 2016 7:29 PM GMT (Updated: 29 Sep 2016 7:29 PM GMT)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஊடுருவுவதற்கு தயாராக இருந்த தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் பாதுகாப்பு நடவடிக்கை என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று கூறியுள்ளார்.
புதுடெல்லி:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஊடுருவுவதற்கு தயாராக இருந்த தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் பாதுகாப்பு நடவடிக்கை என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று கூறியுள்ளார்.
இது பற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அனைத்து படைகளையும் எதிர்க்கும் திறனுடன் இந்தியா உள்ளது. இந்திய ராணுவம் மற்றும் நரேந்திர மோடியின் தலைமையினால் நாம் பெருமை அடைந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் முதன்முறையாக மேற்கொண்ட நேரடி ராணுவ நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்த பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. நிலக்கரி, மின்சாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுரங்கங்களுக்கான மத்திய மந்திரி பியூஷ் கோயல் தனது டுவிட்டர் செய்தியில், நமது நாட்டினை பாதுகாக்க தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினருக்கு பாராட்டுகள். தீவிரவாதத்திற்கு எதிராக போரிடும் பணியில் நாம் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் தனது டுவிட்டர் செய்தியில், பாகிஸ்தானின் மண்ணில் இருந்து தீவிரவாதம் தொடங்குவது பற்றி சோதனை செய்யும்படி மேற்கொண்ட தொடர்ச்சியான தூதரக முயற்சிகளுக்கு முன்னேற்றம் ஏற்படாத நிலையில் தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஊடுருவுவதற்கு தயாராக இருந்த தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் பாதுகாப்பு நடவடிக்கை என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று கூறியுள்ளார்.
இது பற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அனைத்து படைகளையும் எதிர்க்கும் திறனுடன் இந்தியா உள்ளது. இந்திய ராணுவம் மற்றும் நரேந்திர மோடியின் தலைமையினால் நாம் பெருமை அடைந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் முதன்முறையாக மேற்கொண்ட நேரடி ராணுவ நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்த பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. நிலக்கரி, மின்சாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுரங்கங்களுக்கான மத்திய மந்திரி பியூஷ் கோயல் தனது டுவிட்டர் செய்தியில், நமது நாட்டினை பாதுகாக்க தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினருக்கு பாராட்டுகள். தீவிரவாதத்திற்கு எதிராக போரிடும் பணியில் நாம் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் தனது டுவிட்டர் செய்தியில், பாகிஸ்தானின் மண்ணில் இருந்து தீவிரவாதம் தொடங்குவது பற்றி சோதனை செய்யும்படி மேற்கொண்ட தொடர்ச்சியான தூதரக முயற்சிகளுக்கு முன்னேற்றம் ஏற்படாத நிலையில் தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X