என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பங்குச்சந்தையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு 10 சதவீதமாக அதிகரிப்பு: தத்தாத்ரேயா
Byமாலை மலர்29 Sep 2016 11:27 AM GMT (Updated: 29 Sep 2016 11:27 AM GMT)
பங்குச்சந்தையில் செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நல மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாவில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் முதல் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த முதலீடு இ.டி.எப். என்னும் பங்குச்சந்தை வர்த்தக நிதி வாயிலாக செய்யப்படுகிறது. தற்போது இ.பி.எப். சந்தாவில் இருந்து 5 சதவீதம் நிதி, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதை அதிகரிக்க இ.பி.எப். அமைப்பு பரிசீலித்து வந்தது.
இந்த நிலையில் இ.பி.எப். அமைப்பில் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட மத்திய அறங்காவலர்கள் குழு கூட்டம், டெல்லியில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அப்போது பங்குச்சந்தையில் இ.பி.எப். நிதியை கூடுதலாக முதலீடு செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு பங்குச்சந்தையில் செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நல மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாவில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் முதல் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த முதலீடு இ.டி.எப். என்னும் பங்குச்சந்தை வர்த்தக நிதி வாயிலாக செய்யப்படுகிறது. தற்போது இ.பி.எப். சந்தாவில் இருந்து 5 சதவீதம் நிதி, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதை அதிகரிக்க இ.பி.எப். அமைப்பு பரிசீலித்து வந்தது.
இந்த நிலையில் இ.பி.எப். அமைப்பில் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட மத்திய அறங்காவலர்கள் குழு கூட்டம், டெல்லியில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அப்போது பங்குச்சந்தையில் இ.பி.எப். நிதியை கூடுதலாக முதலீடு செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு பங்குச்சந்தையில் செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நல மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X