என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.எல்.ஏ. கண்ணில் மிளகாய்ப்பொடி தூவிய வழக்கில் பெண் கைது
Byமாலை மலர்29 Sep 2016 8:28 AM GMT (Updated: 29 Sep 2016 8:29 AM GMT)
முசாபர்நகர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கண்ணில் மிளகாய்ப்பொடி தூவிய வழக்கில் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முசாபர்நகர்:
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ. கபில் தேவ் அகர்வால் கடந்த 12-ம் தேதி தனது அலுவலகத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று பேர் பைக்கில் வந்து கபில் தேவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். முன்னதாக மிளகாய்ப்பொடியை தூவியுள்ளனர்.
இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ. அதிர்ஷடவசமாக தப்பிவிட்டார். எனினும் மிளகாய் பொடி தாக்குதலால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ கபில் தேவ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தப்பியோடிய குற்றவாளிகள் மூவரையும் முசாபர்நகர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய பெண் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முசாபர்நகர் பகுதியை சேர்ந்த விக்ராந்த், கபில், பிரதீப் ஆகிய மூவரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டதும், கைதான பெண் விக்ராந்தின் தாயார் என்பதும் தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ. கபில் தேவ் அகர்வால் கடந்த 12-ம் தேதி தனது அலுவலகத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று பேர் பைக்கில் வந்து கபில் தேவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். முன்னதாக மிளகாய்ப்பொடியை தூவியுள்ளனர்.
இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ. அதிர்ஷடவசமாக தப்பிவிட்டார். எனினும் மிளகாய் பொடி தாக்குதலால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ கபில் தேவ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தப்பியோடிய குற்றவாளிகள் மூவரையும் முசாபர்நகர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய பெண் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முசாபர்நகர் பகுதியை சேர்ந்த விக்ராந்த், கபில், பிரதீப் ஆகிய மூவரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டதும், கைதான பெண் விக்ராந்தின் தாயார் என்பதும் தெரிய வந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X