search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்
    X

    பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்

    சர்வதேச எல்லையையொட்டி பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய வீரர்கள் நேற்று இரவு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி, செப். 29-

    காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த 18-ந்தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    கடந்த 2 தினங்களாக பாகிஸ்தான் படைகள் அத்து மீறலில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ் தானுக்கு பதிலடி கொடுக் கும் விதமாக எல்லையில் இந்தியா தாக்குதல் நடத்தியது. சர்வதேச எல்லையை யொட்டி பாகிஸ்தான் பகுதி யில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய வீரர்கள் நேற்று இரவு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தீவிர வாதிகள் பலர் கொல்லப் பட்டனர். தீவிரவாதிகளின் பல்வேறு முகாம்களை ராணுவத்தினர் தாக்கி அழித்தனர்.

    இதை ராணுவ தளபதி நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்போம். எதையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருக்கிறது என்றார்.

    Next Story
    ×