search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் 12 வயது சிறுமியை கற்பழித்த 6 திருடர்கள்: கொள்ளையடித்த பிறகு அட்டூழியம்
    X

    உத்தரபிரதேசத்தில் 12 வயது சிறுமியை கற்பழித்த 6 திருடர்கள்: கொள்ளையடித்த பிறகு அட்டூழியம்

    உத்தரபிரதேசத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த பிறகு 12 வயது சிறுமியை கடத்தி 5 பேர் கொண்ட கும்பல் கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    போபால்:

    உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள புறநகர் பகுதியில் 6 கொள்ளையர்கள் ஒரு வீட்டுக்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடித்தனர்.

    அவர்கள் 6 பேரும் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டியதால் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் சத்தம் போடாமல் இருந்து விட்டனர்.

    கொள்ளையடித்த பொருட்களை மூட்டையாகக் கட்டிக் கொண்டு புறப்பட்ட போது கொள்ளையர்கள் கண்ணில் அந்த குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுமி தென்பட்டாள். உடனே கொள்ளையர்கள் அந்த சிறுமியை கத்தி முனையில் மிரட்டி கடத்தி சென்றனர்.

    சிறிது நேரம் கழித்து பெற்றோர் அந்த சிறுமியை தேடி அலைந்தனர். அதிகாலை அந்த சிறுமி வயல் பகுதியில் மயங்கிய நிலையில் கிடப்பது தெரிய வந்தது.

    உடனே அந்த சிறுமியை மீட்டு லக்னோவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது திருடர்களில் 4 அல்லது 5 பேர் அந்த சிறுமியை கற்பழித்து இருப்பது தெரிய வந்தது. அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து லக்னோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×