search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகுபலி பாணியில் மகளை காப்பாற்றப் போராடிய தந்தை: வைரலான புகைப்படங்கள்
    X

    பாகுபலி பாணியில் மகளை காப்பாற்றப் போராடிய தந்தை: வைரலான புகைப்படங்கள்

    ஆந்திராவில் தந்தை ஒருவர் ‘பாகுபாலி’ பாணியில் தனது மகளை காப்பாற்றப் போராடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
    விசாகப்பட்டினம்:

    கன மழை காரணமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பங்கி சதிபாபு (30) உடல்நிலை சரியில்லாத தனது 6 மாத மகளை காப்பாற்ற பாகுபாலி பட பாணியில் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

    கழுத்தளவு நீரில் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தனது குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பங்கி சதிபாபு சேர்த்திருக்கிறார். தனது உயிரையும் பொருட்படுத்தாது சதிபாபு மகளை தூக்கிக் கொண்டு சென்றதை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை மழை தொடர்பான விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
    Next Story
    ×