என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தூதராக மோகன்லால் நியமனம்: பினராயி விஜயன் அறிவிப்பு
Byமாலை மலர்28 Sep 2016 11:31 AM GMT (Updated: 28 Sep 2016 11:31 AM GMT)
கேரளாவில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தூதராக மோகன்லால் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் இறந்த பின்னும் பலரை வாழ வைக்க முடியும் என்பதால் உயிர் காக்கும் உடல் உறுப்பு தானம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக கடந்த 2012-ம் ஆண்டு மிருத சஞ்சீவினி என்ற திட்டத்தை கேரள அரசு அறிவித்தது. ‘கேரள நெட்வொர்க் பார் ஆர்கன் சேரிங்’ என்ற தனியார் அமைப்பின் உதவியுடன் கேரள அரசின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கேரளாவில் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயன் இந்த திட்டத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து உடல் உறுப்பு தான விளம்பர தூதுவராக பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி பினராயி விஜயன் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அதில், உடல் உறுப்பு தானம் உயிர் காக்கும் என்ற கோஷத்துடன் இந்த திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பலரது உயிரை காக்க முடியும். இந்த திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக இதன் விளம்பர தூதுவராக நடிகர் மோகன்லால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறி உள்ளார்.
உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் இறந்த பின்னும் பலரை வாழ வைக்க முடியும் என்பதால் உயிர் காக்கும் உடல் உறுப்பு தானம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக கடந்த 2012-ம் ஆண்டு மிருத சஞ்சீவினி என்ற திட்டத்தை கேரள அரசு அறிவித்தது. ‘கேரள நெட்வொர்க் பார் ஆர்கன் சேரிங்’ என்ற தனியார் அமைப்பின் உதவியுடன் கேரள அரசின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கேரளாவில் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயன் இந்த திட்டத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து உடல் உறுப்பு தான விளம்பர தூதுவராக பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி பினராயி விஜயன் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அதில், உடல் உறுப்பு தானம் உயிர் காக்கும் என்ற கோஷத்துடன் இந்த திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பலரது உயிரை காக்க முடியும். இந்த திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக இதன் விளம்பர தூதுவராக நடிகர் மோகன்லால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X