என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விபசார தொழிலில் ஈடுபட்ட தாய்-சகோதரியை சுட்டு கொன்ற வாலிபர்
Byமாலை மலர்28 Sep 2016 5:09 AM GMT (Updated: 28 Sep 2016 5:09 AM GMT)
அரியானா மாநிலம் குர்கானில் விபார தொழிலில் ஈடுபட்ட தாய்-சகோதரியை வாலிபர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குர்கான்:
டெல்லியை ஒட்டி உள்ள அரியானா மாநிலத்தை சேர்ந்த பகுதி குர்கான். இந்த ஊரைச்சேர்ந்தவர் சுமித்குமார். இவருடைய 36 வயது தாயாரும், 16 வயது சகோதரியும் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இது சுமித்குமாருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் தாய் மற்றும் சகோதரியை கண்டித்தார். இந்த தொழிலில் இருந்து விடுபடுமாறு அவர் வற்புறுத்தி வந்தார்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சுமித்குமார் தனது நண்பர்கள் பிரதீப்குமார், தரம்பீர் ஆகியோருடன் சேர்ந்து தாய் மற்றும் சகோதரியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி அவர்கள் 2 நாட்டு துப்பாக்கிகளை வாங்கி வந்தனர். அதை வைத்து வீட்டில் இருந்த தாய், சகோதரி இருவரையும் சுட்டு கொன்றனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
டெல்லியை ஒட்டி உள்ள அரியானா மாநிலத்தை சேர்ந்த பகுதி குர்கான். இந்த ஊரைச்சேர்ந்தவர் சுமித்குமார். இவருடைய 36 வயது தாயாரும், 16 வயது சகோதரியும் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இது சுமித்குமாருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் தாய் மற்றும் சகோதரியை கண்டித்தார். இந்த தொழிலில் இருந்து விடுபடுமாறு அவர் வற்புறுத்தி வந்தார்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சுமித்குமார் தனது நண்பர்கள் பிரதீப்குமார், தரம்பீர் ஆகியோருடன் சேர்ந்து தாய் மற்றும் சகோதரியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி அவர்கள் 2 நாட்டு துப்பாக்கிகளை வாங்கி வந்தனர். அதை வைத்து வீட்டில் இருந்த தாய், சகோதரி இருவரையும் சுட்டு கொன்றனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X