search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபசார தொழிலில் ஈடுபட்ட தாய்-சகோதரியை சுட்டு கொன்ற வாலிபர்
    X

    விபசார தொழிலில் ஈடுபட்ட தாய்-சகோதரியை சுட்டு கொன்ற வாலிபர்

    அரியானா மாநிலம் குர்கானில் விபார தொழிலில் ஈடுபட்ட தாய்-சகோதரியை வாலிபர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    குர்கான்:

    டெல்லியை ஒட்டி உள்ள அரியானா மாநிலத்தை சேர்ந்த பகுதி குர்கான். இந்த ஊரைச்சேர்ந்தவர் சுமித்குமார். இவருடைய 36 வயது தாயாரும், 16 வயது சகோதரியும் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

    இது சுமித்குமாருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் தாய் மற்றும் சகோதரியை கண்டித்தார். இந்த தொழிலில் இருந்து விடுபடுமாறு அவர் வற்புறுத்தி வந்தார்.

    ஆனால் அவர்கள் தொடர்ந்து விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சுமித்குமார் தனது நண்பர்கள் பிரதீப்குமார், தரம்பீர் ஆகியோருடன் சேர்ந்து தாய் மற்றும் சகோதரியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி அவர்கள் 2 நாட்டு துப்பாக்கிகளை வாங்கி வந்தனர். அதை வைத்து வீட்டில் இருந்த தாய், சகோதரி இருவரையும் சுட்டு கொன்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×