search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்தேக நபர்கள் நடமாட்டம் எதிரொலி: பதன்கோட் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை
    X

    சந்தேக நபர்கள் நடமாட்டம் எதிரொலி: பதன்கோட் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை

    பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் சந்தேக நபர்கள் நடமாட்டம் எதிரொலி காரணமாக பாதுகாப்புபடையினர் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்
    பதன்கோட்:

    பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமான தளம் மீது கடந்த ஜனவரி 1-ந் தேதி நள்ளிரவு, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், பதன்கோட்டில் இருந்து டல்ஹவுசி செல்லும் சாலையில், சந்தேகத்துக்குரிய வகையில் சில நபர்கள் நடமாடி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனால் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் அபாயம் எழுந்துள்ளது. இதையடுத்து, பதன்கோட்-டல்ஹவுசி சாலையில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 400-க்கும் மேற்பட்ட பாதுகாப்புபடையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அங்கு அதிகபட்ச உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராணுவமும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.

    Next Story
    ×