என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரபிரதேச மாநிலத்தில் புதிய மந்திரிகளாக 4 பேர் பதவி ஏற்பு
Byமாலை மலர்27 Sep 2016 3:42 AM GMT (Updated: 27 Sep 2016 3:42 AM GMT)
உத்தரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் அரசின் மந்திரிசபை நேற்று 8-வது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 4 பேர் புதிய கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் அரசின் மந்திரிசபை நேற்று 8-வது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் காயத்ரி பிரசாத் பிரஜாபதி, சிவ்காந்த் ஓஜா, மனோஜ்குமார் பாண்டே, ஜியாவுதீன் ரிஸ்வி ஆகிய 4 பேர் புதிய கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்றனர். மேலும் 6 மந்திரிகள் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டனர். அவர்களுக்கு கவர்னர் ராம்நாயக் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அந்த மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் இதுதான் மந்திரிசபையின் கடைசி மாற்றமாக இருக்கும் என தெரிகிறது.
புதிய மந்திரிகளில் காயத்ரி பிரசாத் 4-வது முறையாக பதவி ஏற்றுள்ளார். கடந்த 12-ந் தேதி தான் அவர் நீக்கப்பட்டார். இப்போது அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், அவரது தம்பி சிவ்பால்சிங் யாதவ், முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் அரசின் மந்திரிசபை நேற்று 8-வது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் காயத்ரி பிரசாத் பிரஜாபதி, சிவ்காந்த் ஓஜா, மனோஜ்குமார் பாண்டே, ஜியாவுதீன் ரிஸ்வி ஆகிய 4 பேர் புதிய கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்றனர். மேலும் 6 மந்திரிகள் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டனர். அவர்களுக்கு கவர்னர் ராம்நாயக் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அந்த மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் இதுதான் மந்திரிசபையின் கடைசி மாற்றமாக இருக்கும் என தெரிகிறது.
புதிய மந்திரிகளில் காயத்ரி பிரசாத் 4-வது முறையாக பதவி ஏற்றுள்ளார். கடந்த 12-ந் தேதி தான் அவர் நீக்கப்பட்டார். இப்போது அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், அவரது தம்பி சிவ்பால்சிங் யாதவ், முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X