என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருப்பு பண விவகாரம்: கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு திட்டவட்டம்
Byமாலை மலர்23 Sep 2016 9:04 PM GMT (Updated: 23 Sep 2016 9:04 PM GMT)
கருப்பு பணம் குறித்த விவரங்களை தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
கருப்பு பண விவரங்களை, தானாக முன்வந்து தெரிவித்து, சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க 4 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜூன் 1–ந்தேதி தொடங்கிய இத்திட்டம் செப்டம்பர் 30–ந்தேதி முடிவடைகிறது.
இந்த காலகட்டத்தில், தங்களது கருப்பு பண விவரங்களை அளிப்பவர்கள், 45 சதவீத வரி மற்றும் அபராதம் செலுத்தி, வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
ஆனால், செப்டம்பர் 30–ந்தேதிக்குள் கருப்பு பண விவரங்களை அளிக்காதவர்கள் மீது, அதன்பிறகு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
செப்டம்பர் 30-ம் தேதிக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், கருப்பு பண விவரங்களை அளிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வருமான வரி விவரங்களை தாக்கல் செய்வதற்கான தேதி மேலும் நீட்டிக்கப்படுமா என்று பல்வேறு தரப்பில் இருந்து எதிர்பார்ப்புகள் எழுந்ததாகவும், ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றும் வருவாய் துறை செயலாளர் ஹாஸ்முக் அதியா தெரிவித்தார்.
கருப்பு பண விவரங்களை, தானாக முன்வந்து தெரிவித்து, சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க 4 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜூன் 1–ந்தேதி தொடங்கிய இத்திட்டம் செப்டம்பர் 30–ந்தேதி முடிவடைகிறது.
இந்த காலகட்டத்தில், தங்களது கருப்பு பண விவரங்களை அளிப்பவர்கள், 45 சதவீத வரி மற்றும் அபராதம் செலுத்தி, வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
ஆனால், செப்டம்பர் 30–ந்தேதிக்குள் கருப்பு பண விவரங்களை அளிக்காதவர்கள் மீது, அதன்பிறகு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
செப்டம்பர் 30-ம் தேதிக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், கருப்பு பண விவரங்களை அளிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வருமான வரி விவரங்களை தாக்கல் செய்வதற்கான தேதி மேலும் நீட்டிக்கப்படுமா என்று பல்வேறு தரப்பில் இருந்து எதிர்பார்ப்புகள் எழுந்ததாகவும், ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றும் வருவாய் துறை செயலாளர் ஹாஸ்முக் அதியா தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X