என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்களுடன் மோடி, அமித்ஷா இன்று ஆலோசனை
Byமாலை மலர்26 Aug 2016 11:31 PM GMT (Updated: 26 Aug 2016 11:31 PM GMT)
பா.ஜ.க. ஆளும் மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சியின் தலைவர் அமித்ஷா ஆகியோர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
புதுடெல்லி:
ஏழைகளுக்கு ஆதரவான திட்டங்கள் குறித்து பா.ஜ.க. ஆளும் மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சியின் தலைவர் அமித்ஷா ஆகியோர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க. ஆளும் மாநில துணை முதல்-மந்திரிகளும் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் மாநில அரசுகளின் மக்கள் நல திட்டங்கள் குறித்தும் அவற்றை செயல்படுத்தும் வழிமுறை குறித்து முதல்-மந்திரிகள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றதை தொடர்ந்து இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைப்பு மற்றும் அரசாங்கத்திற்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைப்பு நிலவ வேண்டும் என்று அமித்ஷா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
மாநிலத்தில் கட்சியானது ஆட்சியில் உள்ள போது பெருவாரியான மக்களை அரசாங்கத்தின் திட்டப் பணிகளை கொண்டு கவர வேண்டும் என்று மோடியும் ஏற்கனவே கூறியிருந்தார்.
ஏழைகளுக்கு ஆதரவான திட்டங்கள் குறித்து பா.ஜ.க. ஆளும் மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சியின் தலைவர் அமித்ஷா ஆகியோர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க. ஆளும் மாநில துணை முதல்-மந்திரிகளும் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் மாநில அரசுகளின் மக்கள் நல திட்டங்கள் குறித்தும் அவற்றை செயல்படுத்தும் வழிமுறை குறித்து முதல்-மந்திரிகள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றதை தொடர்ந்து இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைப்பு மற்றும் அரசாங்கத்திற்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைப்பு நிலவ வேண்டும் என்று அமித்ஷா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
மாநிலத்தில் கட்சியானது ஆட்சியில் உள்ள போது பெருவாரியான மக்களை அரசாங்கத்தின் திட்டப் பணிகளை கொண்டு கவர வேண்டும் என்று மோடியும் ஏற்கனவே கூறியிருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X