என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புனிதர் பட்டம் வழங்கப்படுவதையொட்டி ரூ.5 நாணயத்துடன் அன்னை தெரசா சிறப்பு தபால் உறை வெளியீடு
Byமாலை மலர்24 Aug 2016 1:42 AM GMT (Updated: 24 Aug 2016 1:43 AM GMT)
புனிதர் பட்டம் வழங்கப்படுவதையொட்டி ரூ.5 நாணயத்துடன் அன்னை தெரசா சிறப்பு தபால் உறையை இந்திய தபால் இலாகாவான ‘இந்தியா போஸ்ட்’ சிறப்பு தபால் உறையை வருகிற 2-ந்தேதி வெளியிடுகிறது.
கொல்கத்தா:
மறைந்த பிரபல சமூக சேவகியும் உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரியுமான அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வாடிகன் நகரில் வருகிற 4-ந்தேதி நடக்கிறது.
இதையொட்டி, இந்திய தபால் இலாகாவான ‘இந்தியா போஸ்ட்’ ஆயிரம் எண்ணிக்கையிலான சிறப்பு தபால் உறை ஒன்றை வருகிற 2-ந்தேதி வெளியிடுகிறது. முற்றிலும் தூய்மையான பட்டுத் துணியால் உருவாக்கப்பட்ட இந்த தபால் உறையுடன் அன்னை தெரசாவின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி 2010-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட 5 ரூபாய் நாணயமும் இணைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற தபால் உறை இந்தியாவில் வெளியிடப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இதேபோல் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் நாளில், அன்னை தெரசா பிறந்த நாடான மாசிடோனியா குடியரசு தங்கம் முலாம் பூசப்பட்ட வெள்ளி நாணயங்களை வெளியிட்டு சிறப்பிக்கிறது.
தவிர, கொல்கத்தாவில் அன்னை தெரசா தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய ‘மிஷனரீஸ் ஆப் சாரிட்டி’ தொண்டு நிறுவனத்தில் 5.5 அடி உயரம் கொண்ட அவருடைய வெண்கல சிலை ஒன்றும் மாசிடோனியா குடியரசின் கொல்கத்தா தூதரகம் சார்பில் நாளை (வியாழக்கிழமை) நிறுவப்படுகிறது.
மறைந்த பிரபல சமூக சேவகியும் உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரியுமான அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வாடிகன் நகரில் வருகிற 4-ந்தேதி நடக்கிறது.
இதையொட்டி, இந்திய தபால் இலாகாவான ‘இந்தியா போஸ்ட்’ ஆயிரம் எண்ணிக்கையிலான சிறப்பு தபால் உறை ஒன்றை வருகிற 2-ந்தேதி வெளியிடுகிறது. முற்றிலும் தூய்மையான பட்டுத் துணியால் உருவாக்கப்பட்ட இந்த தபால் உறையுடன் அன்னை தெரசாவின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி 2010-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட 5 ரூபாய் நாணயமும் இணைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற தபால் உறை இந்தியாவில் வெளியிடப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இதேபோல் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் நாளில், அன்னை தெரசா பிறந்த நாடான மாசிடோனியா குடியரசு தங்கம் முலாம் பூசப்பட்ட வெள்ளி நாணயங்களை வெளியிட்டு சிறப்பிக்கிறது.
தவிர, கொல்கத்தாவில் அன்னை தெரசா தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய ‘மிஷனரீஸ் ஆப் சாரிட்டி’ தொண்டு நிறுவனத்தில் 5.5 அடி உயரம் கொண்ட அவருடைய வெண்கல சிலை ஒன்றும் மாசிடோனியா குடியரசின் கொல்கத்தா தூதரகம் சார்பில் நாளை (வியாழக்கிழமை) நிறுவப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X