search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபரை பொதுமக்கள் முன்னிலையில் தாக்கும் திருப்தி தேசாய்
    X

    இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபரை பொதுமக்கள் முன்னிலையில் தாக்கும் திருப்தி தேசாய்

    இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய நபரை பெண்கள் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய், பொதுமக்கள் முன்னிலையில் தாக்கும் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
    புனே:

    பெண்கள் உரிமைகள் ஆர்வலரான பூமாதா பிரிகேட் தலைவர் திருப்தி தேசாய், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை நேரடியாக தட்டிக்கேட்பதுடன், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு சம உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தி வருகிறார்.

    அவ்வகையில், இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஒரு வாலிபரை திருப்தி தேசாய் பொதுமக்கள் முன்னிலையில் செருப்பால் அடித்து தண்டனை வழங்கியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    24 வயது இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிவிட்டு, கருவை கலைக்கும்படி கட்டாயப்படுத்தியதால் அந்த நபருக்கு பாடம் புகட்டியதாக தேசாய் கூறியுள்ளார்.

    மேலும் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற வன்முறைகள் நடக்கும்போது நேரடியாக தண்டனை வழங்குவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நபரை போலீசார் கைது செய்து கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×