என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்5 July 2016 4:26 AM GMT (Updated: 5 July 2016 4:26 AM GMT)
கேரளாவில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஒரு கணவன், மனைவி தங்களது குழந்தையுடன் வேளாங்கண்ணிக்கு சென்றனர்.
அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த ரெயில் நேற்று அதிகாலை கோழிக்கோடு அருகே வடக்கேங்குளம் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த இளம் பெண்ணிடம் ஒரு வாலிபர் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் பயந்து போன அந்த பெண் கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மற்ற பயணிகள் விழித்துக் கொண்டு அந்த வாலிபரை பிடிக்க முயற்சி செய்தனர்.
அந்த சமயம் ரெயில் நிலையத்தை ரெயில் நெருங்கியதால் அந்த வாலிபர் ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடினார். இதை பார்த்த அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் அவரை மடக்கிப்பிடித்தனர். பிறகு அவர் ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் விசாரணையில் அவரது பெயர் முகம்மது (வயது 28) திருச்சூரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரளாவில் ஓடும் ரெயிலில் பெண்களிடம் சில்மிஷம் செய்யும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த மதபோதகர் சோபு என்பவர் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
எனவே பெண்களின் பாதுகாப்பு கருதி ரெயிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். இரவு நேரத்தில் அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஒரு கணவன், மனைவி தங்களது குழந்தையுடன் வேளாங்கண்ணிக்கு சென்றனர்.
அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த ரெயில் நேற்று அதிகாலை கோழிக்கோடு அருகே வடக்கேங்குளம் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த இளம் பெண்ணிடம் ஒரு வாலிபர் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் பயந்து போன அந்த பெண் கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மற்ற பயணிகள் விழித்துக் கொண்டு அந்த வாலிபரை பிடிக்க முயற்சி செய்தனர்.
அந்த சமயம் ரெயில் நிலையத்தை ரெயில் நெருங்கியதால் அந்த வாலிபர் ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடினார். இதை பார்த்த அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் அவரை மடக்கிப்பிடித்தனர். பிறகு அவர் ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் விசாரணையில் அவரது பெயர் முகம்மது (வயது 28) திருச்சூரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரளாவில் ஓடும் ரெயிலில் பெண்களிடம் சில்மிஷம் செய்யும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த மதபோதகர் சோபு என்பவர் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
எனவே பெண்களின் பாதுகாப்பு கருதி ரெயிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். இரவு நேரத்தில் அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X