search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • பிரதமர் மோடி மீது காங்கிரசும், ராகுல்காந்தி மீது பாஜகவும் நோட்டீஸ்.
    • நோட்டீஸ் தொடர்பாக வரும் 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவு.

    தேர்தல் நடத்தை விதிமீறிய புகாரில், பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமைக்கு தேர்தல் ஆணையம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக பிரதமர் மோடி மீது காங்கிரசும், ராகுல்காந்தி மீது பாஜகவும் மாறி மாறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மதம், சாதி, சமூகம், மொழி அடிப்படையில் பிளவு ஏற்படுத்துவதாகவும், வெறுப்பு பிரசாரம் மேற்கொள்வதாகவும் பிரதமர் மோடி, ராகுல் மீது புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அதில், "தங்கள் கட்சி வேட்பாளர்களின் நடவடிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள் முதன்மையாக பொறுப்பேற்க வேண்டும். உயர்ந்த பொறுப்பில் இருக்கும் நபர்களின் பிரசார உரைகள் தீவிர விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை" என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், இது தொடர்பாக வரும் 29ம் தேதிக்குள் விளக்களிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்படி நடவடிக்கை.
    • யாருடைய ஆயுதம் தற்செயலாக செயலிழந்தது என்று குறிப்பிடவில்லை.

    சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் தற்செயலாக துப்பாக்கி வெடித்ததால் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) கான்ஸ்டபிள் உயிரிழந்தார். மற்றொரு காவலர் காயமடைந்துள்ளார்.

    நேற்று இரவு 11 மணியளவில், மாநில காவல்துறையின் இரு பிரிவுகளான டிஆர்ஜி மற்றும் பஸ்தர் ஃபைட்டர் ஆகியவற்றின் கூட்டுக் குழு, பர்சூர் காவல் நிலைய எல்லையில் மாவோயிஸ்ட்டுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டேவாடா-நாராயண்பூர் மாவட்ட எல்லையை ஒட்டிய ஹந்தவாடா மற்றும் ஹிட்டாவாடா கிராமங்களில் ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ரோந்து பணியின் போது, ஜோக்ராஜ் மற்றும் பர்சுராம் அலாமி ஆகிய இரண்டு டிஆர்ஜி கான்ஸ்டபிள்கள் தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் தோட்டாக்கள் பாய்ந்து காயம் அடைந்தனர்.

    இதில், ஜோக்ராஜ்கிற்கு அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்தார். அலாமிமை மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் ராய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    யாருடைய ஆயுதம் தற்செயலாக செயலிழந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

    • 5-ம் கட்டத் தேர்தலில் ராகுல் உள்பட முக்கியத் தலைவர்கள் களம் இறங்க உள்ளனர்.
    • 5-ம் கட்டத் தேர்தல் மனுத்தாக்கல் மே 3-ந் தேதி நிறைவு பெறுகிறது. 6-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26 மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந்தேதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி கடந்த 19-ந்தேதி முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

    2-ம் கட்டத் தேர்தலுக்கு கடந்த 4-ந்தேதி மனுத் தாக்கல் தொடங்கியது. 8-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நாளை (வெள்ளிக்கிழமை) 89 தொகுதிகளில் 2-ம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.

    3-ம் கட்டத் தேர்தல் 94 தொகுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் கடந்த 19-ந் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. மே மாதம் 7-ந் தேதி 3-ம் கட்டத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    4-ம் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 18-ந்தேதி தொடங்கி இன்று நிறைவு பெறுகிறது. மே மாதம் 13-ந் தேதி 96 தொகுதிகளில் 4-ம் கட்டத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறும்.

    5-ம் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    5-ம் கட்டத் தேர்தலில் ராகுல் உள்பட முக்கியத் தலைவர்கள் களம் இறங்க உள்ளனர். 5-ம் கட்டத் தேர்தல் மனுத்தாக்கல் மே 3-ந் தேதி நிறைவு பெறுகிறது. 6-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    மே 20-ந்தேதி 5-ம் கட்டத் தேர்தலுக்கான 49 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெறும். உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு 5-ம் கட்டத் தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    அதே போல மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு 5-ம் கட்டத் தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெறும். மேற்கு வங்காளத்தில் 7, ஒடிசாவில்-5, ஜார்க்கண்டில்-3, லடாக் தொகுதி மற்றும் காஷ்மீரில் ஒரு தொகுதி ஆகியவற்றுக்கும் 5-ம் கட்டத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    • எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் கார் பயங்கர வேகத்தில் மோதியது.
    • இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 2 பேரை மீட்டு கோதாடா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 8 பேர் இன்று அதிகாலை விஜயவாடாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

    சூர்யா பேட்டை, கோதாடா அருகே உள்ள ஸ்ரீரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் கார் பயங்கர வேகத்தில் மோதியது.

    இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த குழந்தை உள்பட 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 2 பேரை மீட்டு கோதாடா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மே 3-ந்தேதி வாரங்கல் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 4-ந்தேதி மகபூபாத் தொகுதிக்குட்பட்ட 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
    • தொடர்ந்து 5-ந்தேதியும் அவர் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்றது.

    இந்த முறை கூடுதல் இடங்களில் வெற்றி பெற பா.ஜ.க. திட்டமிட்டு அதற்கேற்றவாறு பிரசார பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

    தெலுங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்குகிறார். 30-ந்தேதி ஜாகீராபாத் தொகுதியில் நடக்கும் பிரசார கூட்டத்தில் பங்கேற்கும் மோடி அன்று மாலை ஸ்ரீரங்கம் பள்ளி தொகுதியில் ஐடி ஊழியர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    மே 3-ந்தேதி வாரங்கல் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 4-ந்தேதி மகபூபாத் தொகுதிக்குட்பட்ட 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து 5-ந்தேதியும் அவர் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    • திடீரென ரெயில் நகரத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் இறங்க முடியாமல் தவித்துள்ளான்.
    • சிறுவனை மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்த போலீசார், அச்சிறுவனை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ ஆலம்நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒளிந்து பிடித்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது யார் கண்ணிலும் சிக்காமல் இருப்பதற்காக முடிவு செய்த சிறுவன் அங்கு தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது ஏறி ஒளிந்துள்ளான். ஆனால் திடீரென ரெயில் நகரத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் இறங்க முடியாமல் தவித்துள்ளான்.

    பின்னர் ரெயிலின் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து அழுதுகொண்டே பயணித்துள்ளான். அந்த ரெயில் ஹர்டோய் ரெயில் நிலையத்தை அடைந்த போது அங்கு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் சக்கரங்களுக்கு இடையே சிறுவன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அந்த சிறுவனை பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுவன் லக்னோவின் ராஜாஜிபுரத்தில் உள்ள பாலாஜி மந்திர் பகுதியை சேர்ந்த அஜய் என்பதும், ரெயில் சக்கரங்களுக்கிடையே அமர்ந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ததும் தெரிய வந்தது. அந்த சிறுவனை மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்த போலீசார், அச்சிறுவனை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    • கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் வசித்து வருகின்றனர்.
    • ஓட்டுப்போடுவதற்காக கடந்த 2 வாரங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அரபு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் வசித்து வருகின்றனர்.

    மாநிலத்தின் 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக கடந்த 2 வாரங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அரபு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பி உள்ளனர். இன்றும் (வியாழக்கிழமை) அதிகமானோர் வருவார்கள் என கூறப்படுகிறது.

    • தாய் மீது அதிக அன்பு கொண்ட சிறுவனை ஊக்குவிக்கும் வகையில் அவனது தாயின் பிறந்தநாளை நடுவானில் கொண்டாட ஏற்பாடு செய்தனர்.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுவனின் செயலையும், ஏர் இந்தியா விமான கேபின் குழுவினரையும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த போது தனது தாயின் பிறந்தநாளை புதுமையாக கொண்டாடி இன்ப அதிர்ச்சி அளித்த சிறுவனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பொதுவாக பிறந்தநாள் அன்று இரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடுவதை அனைவரும் விரும்புவர். தாயின் பிறந்தநாள் அன்று விமானத்தில் சென்றதால் சிறுவன் நடுவானிலேயே அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டான்.

    அதன்படி விமான கேபின் பணியாளர்களிடம் இதுகுறித்து சிறுவன் கூறினான். அவர்கள், தாய் மீது அதிக அன்பு கொண்ட சிறுவனை ஊக்குவிக்கும் வகையில் அவனது தாயின் பிறந்தநாளை நடுவானில் கொண்டாட ஏற்பாடு செய்தனர். அதன்படி விமான கேபின் பணியாளர் இதுகுறித்து மைக்கில் அறிவிக்கவும், விமான பயணிகள் பலரும் சிறுவனின் தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து பணிப்பெண்கள் ஒரு தட்டில் சாக்லேட்டுகளையும், வாழ்த்து குறிப்புகளையும் கொண்டு வந்து சிறுவனின் தாயாரிடம் கொடுத்து வாழ்த்தினர்.

    இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி 85 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 4,500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுவனின் செயலையும், ஏர் இந்தியா விமான கேபின் குழுவினரையும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • சுரேஷ் கோபி மீதான நம்பிக்கையில் 2019 மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா களம் இறக்கியது.
    • திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி வெற்றிக்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள் கடுமையாக உழைத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி நடத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி கேரளாவில் எந்த மக்களவை தொகுதியிலும் கால் பதிக்க முடியவில்லை. அதற்கான நடவடிக்கைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பாரதிய ஜனதா ஈடுபட்டது. இதற்காக சில திட்டங்களை கேரளாவில் செயல்படுத்தி வருகிறது.

    முக்கியமாக அங்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற நடிகர் சுரேஷ்கோபி மூலமாக அதனை நிறைவேற்ற பாரதிய ஜனதா முடிவு செய்தது. கேரளாவில் 1990-களில் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர்களில் ஒருவராக சுரேஷ்கோபி இருந்தார். அவர் மீதான நம்பிக்கையில் 2019 மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா களம் இறக்கியது.

    அந்த தேர்தலில் நிலவிய மும்முனை போட்டியில் சுரேஷ்கோபி 3 லட்சம் வாக்குகளை பெற்று 3-வது இடத்தை பிடித்தார். இது கேரளாவில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு 11.1 சதவீதத்தில் இருந்து 28.2 சதவீதமாக அதிகரிக்க உதவியது. திருச்சூரில் பாரதிய ஜனதாவின் அதிர்ஷ்டத்தை உயர்த்த பிரதமர் மோடி, சுரேஷ்கோபியை கையில் எடுத்தார்.

    அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்கியது. அந்த பதவி 2022-ம் ஆண்டுடன் முடிவடைந்தது. அதன் பிறகு திருச்சூரில் பாரதிய ஜனதா செல்வாக்கை உயர்த்த பிரதமர் மோடி, சுரேஷ் கோபியை தேர்ந்தெடுத்தார். அவர் மூலம் பல்வேறு பணிகளை பிரதமர் மேற்கொண்டார்.

    இதனை தொடர்ந்து தற்போதைய மக்களவை தேர்தலிலும் திருச்சூர் தொகுதியில் போட்டியிட சுரேஷ்கோபிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. காங்கிரசின் மூத்த தலைவரான முரளீதரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் சுனில்குமார் ஆகியோரை எதிர்த்து களம் காண்கிறார்.

    திருச்சூர் தொகுதியில் அவரது வெற்றிக்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள் கடுமையாக உழைத்துள்ளனர். அவரது வெற்றியின் மூலம் கேரளாவில் தனது கணக்கை திறக்க வேண்டும் என்று நம்பிக்கையில் பாரதிய ஜனதா உள்ளது.

    • வெயில் காரணமாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.
    • ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 105 முதல் 107 டிகிரி வரை சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர அச்சப்படுகின்றனர்.

    திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கடும் வெயில் காரணமாக அவதி அடைந்து வருகின்றனர். வெயில் காரணமாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.

    இன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் 1½ மணி நேரத்தில் தரிசனம் முடிந்து வெளியே வந்தனர். எளிதில் தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதியில் நேற்று 64,080 பேர் தரிசனம் செய்தனர். 25,773 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • பிரதமர் மோடி பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே 4 முறை பிரசாரம் செய்தார்.
    • பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    பெங்களுரு:

    கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக நாளை (26-ந்தேதி) 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக 14 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (மே-7-ந்தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    பிரதமர் மோடி பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே 4 முறை பிரசாரம் செய்தார். இந்த நிலையில் மீண்டும் 5-வது முறையாக பிரதமர் மோடி வருகிற 28-ந் தேதி கர்நாடக வருகிறார்.

    மதியம் 1 மணியளவில் தாவணகெரே தொகுதி பா.ஜனதா வேட்பாளர் காயத்ரி சித்தேஷ்வர், ஹாவேரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பசவராஜ் பொம்மை ஆகியோரை ஆதரித்து நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    • வீடியோ வைரலாகி 81 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.
    • வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலரும் தர்பூசணிகளை வீணடித்துவிட்டீர்கள் எனவும், மிகப்பெரிய உணவான பிரியாணியை கெடுக்காதீர்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் புதுமையான உணவு தயாரிப்பு தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. அதில் சில உணவு வகைகள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில உணவு வகைகள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் தர்பூசணி ஜூஸ் சேர்த்து சிக்கன் பிரியாணி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இன்ஸ்டாகிராமில் பரவி வரும் அந்த வீடியோவில், சில இளைஞர்கள் தர்பூசணி பழங்களை கழுவி, வெட்டும் காட்சிகளுடன் தொடங்குகிறது. பின்னர் அந்த பழங்களை துண்டு, துண்டாக வெட்டி ஜூஸ் தயாரிக்கின்றனர். அது முடிந்ததும், கோழி இறைச்சி வெட்டி ஒரு பெரிய கடாயில் போட்டு எண்ணெய், மசாலா, இஞ்சி, பூண்டு சேர்த்து தயாரிக்கிறார்கள். அதன்பிறகு சிக்கன் கலவையில் தர்பூசணி ஜூஸை சேர்த்து, பாஸ்மதி அரிசி போட்டு பிரியாணி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. அந்த வீடியோ வைரலாகி 81 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.

    இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தர்பூசணிகளை வீணடித்துவிட்டீர்கள் எனவும், மிகப்பெரிய உணவான பிரியாணியை கெடுக்காதீர்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள், இது ஒருபோதும் சுவையாக இருக்காது எனவும், இதை சாப்பிட்ட பிறகு ஆம்புலன்சிற்காக காத்திருக்க நேரிடும் எனவும் பதிவிட்டு உள்ளனர்.


    ×