என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி கணவன்-மனைவி படுகாயம்
அம்மாபேட்டை:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், அவளிவநல்லூர் கிராமம், அண்ணாநகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 48). இவர் தனது மனைவி இளமதி (வயது 43) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தார்.
தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டை அருகே உடையார்கோவில் என்ற இடத்தில் சென்றபோது உடையார்கோவில், கீழகோவில் பத்து கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் காயமடைந்த ராதாகிருஷ்ணன் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மனோகரன் மற்றும் இளமதி ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்