search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துப்பேட்டையில் பஸ் மோதி வாலிபர் பலி
    X

    முத்துப்பேட்டையில் பஸ் மோதி வாலிபர் பலி

    முத்துப்பேட்டையில் பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை:

    திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் நடராஜன் (வயது35). இவர் முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது உப்பூர் அருகே எதிரே வேதாரண்யத்திலிருந்து முத்துப்பேட்டையை நோக்கி சென்ற திருச்சி அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நடராஜன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் நடராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×