என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செம்மரகம் கடத்தியதாக 4 பேர் கைது: ஆந்திரா போலீசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
Byமாலை மலர்23 Jan 2018 8:10 AM GMT (Updated: 23 Jan 2018 8:10 AM GMT)
செம்மரம் கடத்தியதாக கைதான 4 பேரை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர காவல்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
செம்மரம் கடத்தியதாக கைதான 4 பேரை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர காவல்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை மண்ணடியை சேர்ந்த சையது இப்ராகிம், ரவேல் குழந்தை ராஜா, நாகூர் கனி, முகமது இக்பால் ஆகியோர் செம்மரம் கடத்தியதாக ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்ட காவல்துறையின ரால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த 4 பேரையும் கைது செய்து ஆந்திர காவல்துறை சட்ட விரோத காவலில் வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்கக்கோரியும் சையது இப்ராகிமின் மனைவி சையது ராபியா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், எம்.வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த மனு குறித்து திருப்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 31-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #tamilnews
செம்மரம் கடத்தியதாக கைதான 4 பேரை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர காவல்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை மண்ணடியை சேர்ந்த சையது இப்ராகிம், ரவேல் குழந்தை ராஜா, நாகூர் கனி, முகமது இக்பால் ஆகியோர் செம்மரம் கடத்தியதாக ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்ட காவல்துறையின ரால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த 4 பேரையும் கைது செய்து ஆந்திர காவல்துறை சட்ட விரோத காவலில் வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்கக்கோரியும் சையது இப்ராகிமின் மனைவி சையது ராபியா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், எம்.வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த மனு குறித்து திருப்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 31-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X