search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியாங்குப்பத்தில் மூதாட்டி மீது தாக்குதல்: கட்டிட தொழிலாளி கைது
    X

    அரியாங்குப்பத்தில் மூதாட்டி மீது தாக்குதல்: கட்டிட தொழிலாளி கைது

    அரியாங்குப்பத்தில் குப்பை கொட்டும் தகராறில் மூதாட்டியை தாக்கிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    பாகூர்:

    அரியாங்குப்பம் கப்சியன் வீதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி சரோஜா (வயது60). இவருக்கும் எதிர்வீட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திகேயன் (46) குடும்பத்துக்கும் ஏற்கனவே குப்பை கொட்டும் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்றும் இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் வீட்டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து வந்து சரோஜாவை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரோஜா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் வழக்குபதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். #tamilnews

    Next Story
    ×