search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துப்பேட்டை அருகே மண்பாண்ட தொழிலாளி வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    முத்துப்பேட்டை அருகே மண்பாண்ட தொழிலாளி வீட்டில் நகை-பணம் கொள்ளை

    மண்பாண்ட தொழிலாளி வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த தம்பிக்கோட்டை கீழகாடு பகுதியில் வசிப்பவர் பாலையன் (வயது 40). மண்பாண்ட தொழிலாளி. இவர் நேற்று இரவு வழக்கம் போல் தனது குடும்பத்தினருடன் படுத்து தூங்கினார். அவர்கள் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துள்ளனர். 

    இதனை நோட்டமிட்ட கொள்ளையன் நள்ளிரவில் வீடு புகுந்து பீரோ சாவியை எடுத்து சென்று பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் செயின், ரூ.6 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்று விட்டான்.

    இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் பாலையன் அதிர்ச்சி அடைந்தார். அவர் இது குறித்து முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் கொள்ளையனின் கைரேகையை பதிவு செய்து அவனை தேடி வருகிறார்.

    வீட்டின் உரிமையாளர் தூங்கி கொண்டு இருந்த போது கொள்ளையன் நகை-பணத்தை திருடிய சம்பவம் தம்பிக்கோட்டை கீழகாடு பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×