search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி பழனியில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி பழனியில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

    பஸ்களின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பழனி:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பழனி குளத்துரோடு ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அரசு பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். நகர்ப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களின் கட்டணத்தில் சலுகை அல்லது இலவச பயணம் மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×