என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மண்ணச்சநல்லூர் அருகே மணல் கடத்தல் : 2 பேர் கைது
Byமாலை மலர்21 Jan 2018 2:57 PM GMT (Updated: 21 Jan 2018 2:57 PM GMT)
மண்ணச்சநல்லூர் அருகே அரசு அனுமதியில்லாமல் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மண்ணச்சநல்லூர்:
மண்ணச்சநல்லூர் பூனாம் பாளையத்தில் மணல் கடத்தப்படுவதாக தாலுகா அலுவலகத்துக்கு தகவல் வந்தது. இதனையடுத்து தாசில்தார் மகாலெட்சுமியின் உத்தரவின்பேரில் பூனாம் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சோமசுந்தரம், கிராம உதவியாளர் ஆகியோர் சென்று பார்த்த போது அங்கு சீதாலெட்சுமி நகரில் ஒரு டிராக்டரில் ஆற்று மணல் இருந்ததை கண்டனர். அந்த மணல் திருவானைக்கோவில் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து அரசு அனுமதியில்லாமல் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து மண்ணச்ச நல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ் மற்றும் போலீசார் சீதாலெட்சுமி நகர் சென்று டிராக்டரில் மணல் கடத்தி வந்த ஓட்டுனர் திருவானைக்கோவில் வெள்ளி திருமுத்தம் திருப்பதி(24), தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மணலுடன் டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X