search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழவந்தான் அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பலி
    X

    சோழவந்தான் அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பலி

    சோழவந்தான் அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சோழவந்தான்:

    சோழவந்தான் அருகே உள்ள ஆலங்கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் வீரணன், கூலி தொழிலாளி. இவரது மனைவி உமா (வயது32). கடந்த சில நாட்களாக உமா மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

    இவர்கள் வீட்டின் அருகே ரெயில் தண்டவாளம் உள்ளது. இன்று காலை அங்கு ரெயிலில் அடிபட்டு உடல் துண்டான நிலையில் உமா பிணமாக கிடந்தார். இரவில் எழுந்து தண்டவாள பகுதிக்கு வந்த அவர், அந்த வழியே சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என தெரிகிறது.

    இது குறித்து மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான உமாவுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். #tamilnews

    Next Story
    ×