search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ்சை போலவே ஷேர் ஆட்டோ கட்டணமும் இருமடங்கு ஆனது
    X

    பஸ்சை போலவே ஷேர் ஆட்டோ கட்டணமும் இருமடங்கு ஆனது

    அரசு பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தியதை போல் ஷேர் ஆட்டோக்களிலும் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது.
    சென்னை:

    பஸ் கட்டணம் 2 மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை ஷேர் ஆட்டோக்கள் பெருமளவில் இயங்குகின்றன.

    பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதும் ஷேர் ஆட்டோக்களிலும் கட்டணத்தை ஏற்ற தொடங்கி விட்டார்கள்

    பரங்கிமலையில் இருந்து மடிப்பாக்கம் கூட்டு ரோடுவரை ரூ.10 வாங்கினார்கள். தற்போது ரூ.20 வாங்குகிறார்கள். வடபழனி, கிண்டியில் இருந்து போரூருக்கு ரூ.15-ல் இருந்து 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    வியாசர்பாடி-எழும்பூர் போலீஸ் கமி‌ஷன் அலுவலகம் ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆக உயர்வு. மூலக்கடை-கோயம்பேடு ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆக உயர்வு.

    தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி.மற்றும் கொருக்குப்பேட்டையில் இருந்து ஐகோர்ட்டுக்கு ரூ.20-ல் இருந்து 40 ஆகவும், தண்டையார்பேட்டை சிக்னலில் இருந்து ஐ.ஓ.சி. வரை ரூ.10-ல் ரூ.20 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    மூலக்கடையில் இருந்து செங்குன்றம் வரை ரூ.20 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×