search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரமுத்து வீட்டுமுன்பு இந்து அமைப்பினர் போராட்டம் - 50 பேர் கைது
    X

    வைரமுத்து வீட்டுமுன்பு இந்து அமைப்பினர் போராட்டம் - 50 பேர் கைது

    ஆண்டாள் குறித்து சர்ச்சை தொடர்பாக கவிஞர் வைரமுத்து வீட்டுமுன்பு போராட்டம் நடத்திய இந்து அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருவான்மியூர்:

    ஆண்டாள் பற்றிய கவிஞர் வைரமுத்துவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வைரமுத்துவுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போலீஸ் நிலையங்களிலும் அவருக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே ஆண்டாள் குறித்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து வைரமுத்து உருக்கமுடன் பேசிய வீடியோ நேற்று வெளியானது. அதில் ‘‘பக்தி இல்லாத எனக்கு சக்தி தந்தவள் ஆண்டாள், என் தாயையும், ஆண்டாளையும் சமமாகவே கருதுகிறேன். தமிழ் சமூகம் என்னை சந்தேகப்படலாமா?’’ என்று வேதனையுடன் விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் திருவான்மியூர் டைகர் வரதாச்சாரிய 1-வது குறுக்குத் தெருவில் உள்ள வைரமுத்து வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்போவதாக அகில பாரத இந்து மகா சபை அமைப்பினர் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று மதியம் அமைப்பின் மாநில துணைத் தலைவர் டன்லப் குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் வைரமுத்து வீட்டை முற்றுகையிட திரண்டு வந்தனர்.

    அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்து அமைப்பினர் போராட்டத்தையடுத்து அடையாறு துணைகமி‌ஷனர் ரோகித்நாத், உதவிகமி‌ஷனர் அசோகன் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
    Next Story
    ×