search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியாங்குப்பம் கண்காணிப்பு இல்லத்தில் கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்து அதிகாரிகளிடம் பேசிய போது எடுத்த படம்.
    X
    அரியாங்குப்பம் கண்காணிப்பு இல்லத்தில் கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்து அதிகாரிகளிடம் பேசிய போது எடுத்த படம்.

    அரியாங்குப்பம் கண்காணிப்பு இல்லத்தில் கவர்னர் திடீர் ஆய்வு

    புதுவை அரசு சமூக நலத்துறை சார்பில் கண்காணிப்பு இல்லம் அரியாங்குப்பத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் இன்று காலை 7 மணியளவில் கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    பாகூர்:

    புதுவை அரசு சமூக நலத்துறை சார்பில் கண்காணிப்பு இல்லம் அரியாங்குப்பத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் அரசு சார்பில் மகளிருக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகள், ஆதரவற்ற மாணவர்கள் தங்கி படிக்கும் வசதிகள், குற்ற செயலில் ஈடுபடும் இளம் சிறார்களை சீர் திருத்தும் பள்ளி உள்ளிட்டவைகள் இயங்கி வருகிறது.

    இந்த இல்லத்தில் இன்று காலை 7 மணியளவில் கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள வகுப்பறைகள், அடிப்படை வசதிகள், சீர் திருத்தப்பள்ளி, கண்காணிப்பு அலுவலகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். இதில் அங்கிருந்த மாணவர்களுடன் அவர் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து அங்கிருந்து அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

    அப்போது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் கவர்னர் கூறும் போது, “வார இறுதி நாட்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆய்வு செய்யப்படும் இடங்களை இனி யாரிடமும் முன் கூட்டியே தகவல் தெரிவிக்க மாட்டேன். பொதுமக்களின் புகார்களுக்கு ஏற்ப சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் உத்தரவிடுவேன்.

    மேலும் வாரத்தின் அலுவலக நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து அரசு அலுவலகங்களுக்கு எந்த முன்னறிவிப்பின்றி துறை செயலருடன் ஆய்வு மேற்கொள்வேன். கண்காணிப்பு இல்லத்தில் உள்ள ஊழியர்களுக்கு போதுமான பயிற்சிகள் இல்லாமல் உள்ளனர். மேலும் அவர்களது திறனை மேம்படுத்துவதற்காக பயிற்சிகளும் அளிக்கப்படும் என் றார்.

    மேலும் அவர் கூறும் போது, நான் யாரையும் தண்டிக்க வரவில்லை. உங்களது திறனை வெளிப்படுத்திடவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவேன். ஒவ்வொரு அலுவலகங்களிலும் மாதம் ஒரு முறை மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதே எனது ஆய்வு இருக்கும் என பேசினார்.

    இந்த ஆய்வின் போது, சமூக நலத்துறை இயக்குனர் சாரங்கபாணி, கண்காணிப்பு இல்லத்தின் உதவி இயக்குனர் தமிழ்மணி, களஅதிகாரி விஜயலட்சுமி மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    ஏற்கனவே அமைச்சர் கந்தசாமி, கவர்னர் கிரண் பெடி தனது துறையை குறி வைத்து செயல்படுவதாக பொது மேடையில் பேசி வரும் நிலையில் மீண்டும் அவரது துறையையே திடீர் கவர்னர் ஆய்வு செய்து வருவது மோதல் போக்கு அதிகரித்து வருகிறதாக தெரிகிறது.

    அமைச்சர் கந்தசாமியின் தீவிர ஆதரவாளர்களும் ஏம்பலம் தொகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கந்தசாமியை நேரில் சந்தித்து கவர்னரிடம் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், சிலர் கவர்னருக்கு எதிராக போராட்டங்களை நடத்தப்போவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

    இது போன்ற நிலையினால் அமைச்சர் கந்தசாமிக்கு ஒதுக்கப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதால் துறையின் அன்றாட பணியை செய்வதிலும் குறைவாகவே உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். #Tamilnews
    Next Story
    ×