search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல்லில் 23-ந்தேதி மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
    X

    நாமக்கல்லில் 23-ந்தேதி மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

    நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி (செய்வாய்கிழமை) காலை 10 மணிக்கு தி.மு.க. அலுவலகத்தில் நடக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி (செய்வாய்கிழமை) காலை 10 மணிக்கு திருச்செங்கோடு சி.எச்.பி.காலனியில் உள்ள தி.மு.க.அலுவலகத்தில் அவை தலைவர் ஆர்.நடன சபாபதி தலைமையில் நடைபெறுகிறது. இதில் 25-ந்தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் மார்ச் மாதம் 24, 25-ந்தேதி ஈரோட்டில் நடைபெறும் மண்டல மாநாடு குறித்தும் விவாதிக்கப்படுகிறது. எனவே கட்சி நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #tamilnews

    Next Story
    ×