என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓசூரில் டைல்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து
Byமாலை மலர்20 Jan 2018 4:25 PM GMT (Updated: 20 Jan 2018 4:25 PM GMT)
ஓசூரில் இன்று காலை டைல்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா அவுசிங் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். தொழில் அதிபரான இவர் தனது நண்பருடன் சேர்ந்து ஓசூர், பாகலூர் சாலையில் உள்ள என்.ஜி.ஓ .காலனியில் டைல்ஸ் மற்றும் சமையல் அறை-குளியல் அறை சாதனங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்தக் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து அவர்கள் ஓசூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ கொளுந்து விட்டு எரிந்ததால் உடடினயாக தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. கடைக்குள் புகைமண்டலம் அதிகமாக இருந்தது. இதனால் கடையின் மேல் பகுதியில் உள்ள கண்ணாடிகளை உடைத்து விட்டு பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினார்கள். மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X