search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவதானப்பட்டி அருகே காரில் கடத்தப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்
    X

    தேவதானப்பட்டி அருகே காரில் கடத்தப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்

    தேவதானப்பட்டி அருகே காரில் கடத்தப்பட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி போலீசார் காட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது திருச்சியில் இருந்து குமுளி நோக்கி சென்ற ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர்.

    அந்த காரில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் இடுக்கி மாவட்டம் குமுளியை சேர்ந்த நூறுஉல்லா (38), ராஜேஸ் (38), நூர்முகமது (37) என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 3 கிலோ மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இப்பகுதியில் தொடர்ந்து போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதை போலீசார் கண்டுபிடித்து வருகின்றனர். இந்த பொருட்கள் எங்கிருந்து கடத்தப்படுகிறது என்பதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×