என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பரங்குன்றத்தில் சமையல்காரர் வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்20 Jan 2018 11:02 AM GMT (Updated: 20 Jan 2018 11:02 AM GMT)
திருப்பரங்குன்றத்தில் சமையல்காரர் வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் பாம்பன் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது61). சமையல்காரர். நேற்று முன்தினம் இவர் மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு சமையல் பணிக்கு சென்றார்.
சாமநத்தம் பகுதியில் நடைபெற்ற விழாவில் சமையல் பணி செய்த அவர் இரவில் அங்கேயே தங்கினார். நேற்று இரவு 7 மணி அளவில் அவர்கள் வீடு திரும்பினர்.
வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்ற ராஜேந்திரன் அலமாரியில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
அப்போது பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்திருப்பது தெரியவந்தது. அலமாரியில் இருந்த 13 பவுன் நகை கொள்ளை போய் இருப்பதாக ராஜேந்திரன் போலீசில் தெரிவித்தார்.
அதே வேளையில் அலமாரியின் மற்றொரு பகுதியில் சேலையில் சுற்றி வைத்திருந்த ரூ.26 ஆயிரத்தை மர்ம நபர்கள் கவனிக்காததால் பணம் தப்பியது.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு யாரோ உள்ளே புகுந்து நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
திருப்பரங்குன்றம் பாம்பன் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது61). சமையல்காரர். நேற்று முன்தினம் இவர் மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு சமையல் பணிக்கு சென்றார்.
சாமநத்தம் பகுதியில் நடைபெற்ற விழாவில் சமையல் பணி செய்த அவர் இரவில் அங்கேயே தங்கினார். நேற்று இரவு 7 மணி அளவில் அவர்கள் வீடு திரும்பினர்.
வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்ற ராஜேந்திரன் அலமாரியில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
அப்போது பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்திருப்பது தெரியவந்தது. அலமாரியில் இருந்த 13 பவுன் நகை கொள்ளை போய் இருப்பதாக ராஜேந்திரன் போலீசில் தெரிவித்தார்.
அதே வேளையில் அலமாரியின் மற்றொரு பகுதியில் சேலையில் சுற்றி வைத்திருந்த ரூ.26 ஆயிரத்தை மர்ம நபர்கள் கவனிக்காததால் பணம் தப்பியது.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு யாரோ உள்ளே புகுந்து நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X