search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவி மாயம்
    X

    ஆண்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவி மாயம்

    ஆண்டிப்பட்டி அருகே மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம் வடக்கு தெரு காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் மகாலட்சுமி (22). வீரபாண்டியில் உள்ள கல்லூரியில் ஆங்கில இலக்கியம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று உத்தமபாளையத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு சென்றுவருவதாக தனது வீட்டில் கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து மாரிமுத்து கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி மாயமானாரா? கடத்தப்பட்டரா? அல்லது காதல் பிரச்சினையில் ஓட்டம் பிடித்தாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    Next Story
    ×