என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா மரணம் குறித்து யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம்: ஓ.பி.எஸ்.
Byமாலை மலர்19 Jan 2018 11:41 PM GMT (Updated: 19 Jan 2018 11:41 PM GMT)
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் செயல்படுவதால் யாரும் கருத்து தெரிவிக்கவேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்விடுத்து உள்ளார். #OPanneerselvam #Jayalalithaa #ADMK
ஆலந்தூர்:
தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.யில் இணைக்கவிடாமல் தமிழக அரசு எதிர்க்கவில்லை. ஜி.எஸ்.டி.யில் பெட்ரோலிய பொருட்களை இணைத்தால் விலை குறையும் என்று யார் சொன்னது?.
பெட்ரோல், டீசல் விலையை கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயம் செய்வார்கள். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக அரசின் வரிகள் குறைவாகத்தான் இருக்கிறது.
வன்முறையை தூண்டும் வகையில் யாரும் கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது. முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. நீதியரசர் ஆறுமுகசாமி விசாரித்துக்கொண்டு இருக்கிறார். விசாரணை முடிந்தபின்னர்தான் முழு விவரங்களும் தெரிய வரும். அதற்கு முன்னால் கருத்துகள் சொல்வது சரியாக இருக்காது. அது விசாரணைக்கு குறுக்கீடாக இருக்கும்.
எனவே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் செயல்படுவதால் யாரும் கருத்துக்களை பதிவிட வேண்டாம். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உரிய விளக்கம் அளிக்கப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.யில் இணைக்கவிடாமல் தமிழக அரசு எதிர்க்கவில்லை. ஜி.எஸ்.டி.யில் பெட்ரோலிய பொருட்களை இணைத்தால் விலை குறையும் என்று யார் சொன்னது?.
பெட்ரோல், டீசல் விலையை கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயம் செய்வார்கள். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக அரசின் வரிகள் குறைவாகத்தான் இருக்கிறது.
வன்முறையை தூண்டும் வகையில் யாரும் கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது. முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. நீதியரசர் ஆறுமுகசாமி விசாரித்துக்கொண்டு இருக்கிறார். விசாரணை முடிந்தபின்னர்தான் முழு விவரங்களும் தெரிய வரும். அதற்கு முன்னால் கருத்துகள் சொல்வது சரியாக இருக்காது. அது விசாரணைக்கு குறுக்கீடாக இருக்கும்.
எனவே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் செயல்படுவதால் யாரும் கருத்துக்களை பதிவிட வேண்டாம். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உரிய விளக்கம் அளிக்கப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X