என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
'மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்': தினத்தந்திக்கு, மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Byமாலை மலர்19 Jan 2018 8:49 PM GMT (Updated: 19 Jan 2018 8:49 PM GMT)
தினமும் தினத்தந்தி படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை 2 கோடியே 31 லட்சமாக உயர்ந்துள்ளது. இதையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், தினத்தந்தியின் மணி மகுடத்தில் ஒளி உமிழும் மேலுமொரு வைரக்கல்லாக இந்த அரிய சாதனை விளங்கப் போகிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தினத்தந்திக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தினத்தந்தி நாளேட்டின் வாசகர் எண்ணிக்கை 2.31 கோடி வரை உயர்ந்துள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தியாக வந்திருக்கிறது. அதில் மாநில மொழிப் பத்திரிகைகளில் இந்தியாவிலேயே தினத்தந்தி முதலிடத்தை பெற்றிருக்கிறது என்ற செய்தி தமிழ்நாட்டிற்கு பெருமை அளிப்பதாகும். பவள விழா கண்டுள்ள பாரம்பரியமிக்க தினத்தந்தியின் மணி மகுடத்தில் ஒளி உமிழும் மேலுமொரு வைரக்கல்லாக இந்த அரிய சாதனை விளங்க போகிறது.
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் பட்டி தொட்டிகளில் உள்ளவர்களுக்கும் நாள்தோறும் மாநில செய்திகள், இந்திய செய்திகள் மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை கொண்டு சேர்த்து தொடர்ந்து விழிப்புணர்வை தூண்டும் பணியில் தொய்வேதுமின்றி பாடுபட்டு வரும் தினத்தந்தியின் அர்ப்பணிப்பு மனப்பான்மைக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தினத்தந்தி நாளிதழ் அதன் வளர்ச்சி பாதையில் மேலும் பல மைல் கற்களை உருவாக்கி பத்திரிகையுலகில் உயர் தனி செழுமையையும், சிறப்பையும் செதுக்கி என்றென்றும் இன மொழி உணர்வுடன் நின்று நிலைத்திட வேண்டும் தி.மு.க. சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தினத்தந்திக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தினத்தந்தி நாளேட்டின் வாசகர் எண்ணிக்கை 2.31 கோடி வரை உயர்ந்துள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தியாக வந்திருக்கிறது. அதில் மாநில மொழிப் பத்திரிகைகளில் இந்தியாவிலேயே தினத்தந்தி முதலிடத்தை பெற்றிருக்கிறது என்ற செய்தி தமிழ்நாட்டிற்கு பெருமை அளிப்பதாகும். பவள விழா கண்டுள்ள பாரம்பரியமிக்க தினத்தந்தியின் மணி மகுடத்தில் ஒளி உமிழும் மேலுமொரு வைரக்கல்லாக இந்த அரிய சாதனை விளங்க போகிறது.
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் பட்டி தொட்டிகளில் உள்ளவர்களுக்கும் நாள்தோறும் மாநில செய்திகள், இந்திய செய்திகள் மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை கொண்டு சேர்த்து தொடர்ந்து விழிப்புணர்வை தூண்டும் பணியில் தொய்வேதுமின்றி பாடுபட்டு வரும் தினத்தந்தியின் அர்ப்பணிப்பு மனப்பான்மைக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தினத்தந்தி நாளிதழ் அதன் வளர்ச்சி பாதையில் மேலும் பல மைல் கற்களை உருவாக்கி பத்திரிகையுலகில் உயர் தனி செழுமையையும், சிறப்பையும் செதுக்கி என்றென்றும் இன மொழி உணர்வுடன் நின்று நிலைத்திட வேண்டும் தி.மு.க. சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X