search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திட்டக்குடியில் குண்டர் சட்டத்தில் கொள்ளையன் கைது
    X

    திட்டக்குடியில் குண்டர் சட்டத்தில் கொள்ளையன் கைது

    திட்டக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி பெரியார் நகரை சேர்ந்தவர் செந்தில் (வயது 35). இவர் பெண்ணாடம் தெற்கு ரதவீதியில் நடந்து சென்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பாபு (35) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.1,000 ரொக்கம், ஒரு செல்போன், ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் வேலூர், தஞ்சாவூர், அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிச்சென்று இருந்ததும் தெரிந்தது.

    இதையொட்டி அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார்.

    அதனைத் தொடர்ந்து, செந்திலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதன்படி செந்திலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். tamilnews

    Next Story
    ×