search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: பெண் பலி
    X

    வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: பெண் பலி

    வேடசந்தூர் அருகே மோட்டார் சைக் கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேபெண் பலியானார்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே உள்ள பூதிபுரத்தை சேர்ந்தவர் வீராச்சாமி. இவரது மனைவி கனகா (வயது45). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று கோவிலுருக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வேடசந்தூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    அப்போது வேடசந்தூரில் இருந்து கோவிலூர் நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேடசந்தூர் அருகே உள்ள பாரதிபுரத்தில் இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கனகா பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ராகுல் என்பவர் மீது வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×