என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை
Byமாலை மலர்18 Jan 2018 4:57 PM GMT (Updated: 18 Jan 2018 5:06 PM GMT)
தா.பேட்டை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தா.பேட்டை:
தா.பேட்டை அடுத்த வாளசி ராமணி ரெட்டியார் தெருவில் வசித்து வந்தவர் பெரியசாமி (70). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெரியசாமியின் மனைவி மாரியம்மாள் இறந்து விட்டார். மனைவி இறந்த சோகத்தில் நேற்று முன்தினம் பெரியசாமி வீட்டில் விவசாயத்திற்கு பயன் படுத்தப்படும் குருணை மருந்தை சாப்பிட்டுள்ளார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த பெரியசாமியை நாமக்கல் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பெரியசாமி இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து தா.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து இறந்து போன பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X