search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு உற்பத்திக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
    X

    பட்டாசு உற்பத்திக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

    பட்டாசு உற்பத்திக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 850 பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை விருதுநகர் மாவட்டத்தில் உள்ளன. இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதம் இந்த தொழிற்சாலைகளின் பங்களிப்பு உள்ளது. இதன்மூலம் 8 லட்சம் பேர் வேலை பெறுகிறார்கள்.

    பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டை தடை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் சிலர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்குகளால் இந்த தொழில் பின்னடைவை சந்தித்து உள்ளது. எனவே சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு விதிகளின் 3 (பி) பிரிவில் தகுந்த திருத்தங்களை செய்து, பட்டாசு உற்பத்திக்கு விலக்கு அளிக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாற்றத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
    Next Story
    ×