என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பட்டாசு உற்பத்திக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
Byமாலை மலர்18 Jan 2018 3:30 AM GMT (Updated: 18 Jan 2018 3:30 AM GMT)
பட்டாசு உற்பத்திக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 850 பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை விருதுநகர் மாவட்டத்தில் உள்ளன. இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதம் இந்த தொழிற்சாலைகளின் பங்களிப்பு உள்ளது. இதன்மூலம் 8 லட்சம் பேர் வேலை பெறுகிறார்கள்.
பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டை தடை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் சிலர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்குகளால் இந்த தொழில் பின்னடைவை சந்தித்து உள்ளது. எனவே சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு விதிகளின் 3 (பி) பிரிவில் தகுந்த திருத்தங்களை செய்து, பட்டாசு உற்பத்திக்கு விலக்கு அளிக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாற்றத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X