என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமகிரிபேட்டை போலீஸ் குடியிருப்பில் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்16 Jan 2018 5:27 PM GMT (Updated: 16 Jan 2018 5:27 PM GMT)
நாமகிரிபேட்டை அருகே போலீஸ் குடியிருப்பில் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகேயுள்ள கல்லாங்குளத்தைச் சேர்ந்தவர் மாதவன் (வயது 47), போலீஸ் ஏட்டு. பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டரின் வாகனத்தை ஓட்டி வந்த இவர் நாமகிரிபேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 13-ந் தேதி வழக்கம்போல் பணி முடிந்தவுடன் வீட்டுக்கு வந்துவிட்டார். அன்று இரவு அவர் வீட்டில் உள்ள மின் விசிறியில் நைலான் போர்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கணவன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவன் தற்கொலைக்கு காரணம் மன உளைச்சலா? அல்லது குடும்ப பிரச்சினையா? என விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட போலீஸ் ஏட்டு மாதவனும் அவரது மனைவி கலைச்செல்வியும் (40)காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு ரஞ்சித்குமார் (23), சுஜய்குமார் (21) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
ராசிபுரம் அருகேயுள்ள கல்லாங்குளத்தைச் சேர்ந்தவர் மாதவன் (வயது 47), போலீஸ் ஏட்டு. பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டரின் வாகனத்தை ஓட்டி வந்த இவர் நாமகிரிபேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 13-ந் தேதி வழக்கம்போல் பணி முடிந்தவுடன் வீட்டுக்கு வந்துவிட்டார். அன்று இரவு அவர் வீட்டில் உள்ள மின் விசிறியில் நைலான் போர்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கணவன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவன் தற்கொலைக்கு காரணம் மன உளைச்சலா? அல்லது குடும்ப பிரச்சினையா? என விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட போலீஸ் ஏட்டு மாதவனும் அவரது மனைவி கலைச்செல்வியும் (40)காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு ரஞ்சித்குமார் (23), சுஜய்குமார் (21) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X