என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கூத்தாநல்லூர் அருகே விபத்தில் மாணவர் உள்பட 2 பேர் பலி
திருவாரூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் கார்த்திகேயன். இவர் பொதக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். மேலகண்ணுச்சாங்குடியை சேர்ந்த நாகூரான் மகன் வினோத் (18).
இந்தநிலையில் நேற்று மாலை கார்த்திகேயனும், வினோத்தும் மோட்டார் சைக்கிளில் கூத்தாநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது தோட்டச்சேரி என்ற இடத்தில் உள்ள ஒரு மதகின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கார்த்திகேயன், வினோத் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.
இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே கார்த்திகேயனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த வினோத்தை திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.
இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்