search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரியில் வங்கி ஊழியர் வீட்டில் நகை - பணம் கொள்ளை
    X

    பொன்னேரியில் வங்கி ஊழியர் வீட்டில் நகை - பணம் கொள்ளை

    பொருட்காட்சிக்கு சென்றபோது வங்கி ஊழியர் வீட்டில் நகை பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் மகேஷ். தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மதியம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை பொருட்காட்சிக்கு சென்று இருந்தார்.

    அப்போது மர்ம நபர்கள் கடப்பாரையால் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர். வீட்டில் இருந்த 10 பவுன் நகை, ரூ.5 ஆயிரம், பட்டு சேலைகள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து தப்பி விட்டனர்.

    இரவு வீடு திரும்பிய மகேஷ் வீட்டில் கொள்ளை நடந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளையர்கள் நகை- பணத்தை மகேஷ் மகளின் பள்ளிக்கூட பையில் வைத்து எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது.
    Next Story
    ×