என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோட்டக்குப்பத்தில் கடன் தகராறில் மோதல்: 2 பெண்கள் காயம்
சேதராப்பட்டு:
புதுவையை அடுத்த கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் மணிபாலன். இவரது மனைவி ஷாகிம்சா (வயது36). இவர் வீட்டிலேயே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஜானகி (32) என்பவர் கடனுக்கு மளிகை பொருட்கள் வாங்கினார். ரூ.4.500 வரை அவர் கடனுக்கு மளிகை பொருட்களை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பல நாட்களாக அதற்கான பணத்தை ஜானகி தரவில்லை.
ஷாகிம்சா பணத்தை கேட்கும் போதேல்லாம் ஜானகி பல காரணங்களை கூறி காலம் கடத்தி வந்தார். இதனால் இருவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்றுமாலை இதுதொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் மாறி,மாறி தாக்கி கொண்டனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக இருவரும் தனித்தனியே கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பினரும் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்