என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
Byமாலை மலர்12 Jan 2018 6:35 AM GMT (Updated: 12 Jan 2018 6:35 AM GMT)
குட்கா விவகாரம் பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதால் தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். #TNAssembly #MKStalin
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரில் இன்று குட்கா விவகாரம் தொடர்பாக பேச எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளார். இதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இருந்து வெளியேறிய ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், குட்கா விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டசபையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளது. குட்கா வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரி தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும், என கூறினார்.
ஏற்கனவே கடந்த புதன்கிழமையும் குட்கா விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #TNAssembly #MKStalin #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X