என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காட்பாடியில் வாலிபர் அடித்து கொலை
வேலூர்:
காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் உமாசங்கர் (வயது 20). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்றிரவு உமாசங்கர் வீட்டிற்கு ஆட்டோவில் வந்த அவரது நண்பர்கள் 3 பேர் உமாசங்கரை வெளியே அழைத்து சென்றுள்ளனர். அதன்பின்னர் உமாசங்கர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் இன்று காலை காட்பாடி அடுத்த கிருஸ்டியான்பேட்டையில் உமாசங்கர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் முழுவதும் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதியினர் மக்கள் காட்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்