search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலாங்கரை கடற்கரையில் அரிய வகை ஆமை இறந்து கரை ஒதுங்கியது
    X

    நீலாங்கரை கடற்கரையில் அரிய வகை ஆமை இறந்து கரை ஒதுங்கியது

    நீலாங்கரையை அடுத்த பாலவாக்கம் அண்ணா சாலை கடற்கரையில் அரிய வகையான ஆலிவ்ரெட்லி ஆமை இறந்து கரை ஒதுங்கி கிடந்தது. இது சுமார் 3 அடி நீலமும், 2 அடி அகலமும் இருந்தது.
    திருவான்மியூர்:

    நீலாங்கரையை அடுத்த பாலவாக்கம் அண்ணா சாலை கடற்கரையில் அரிய வகையான ஆலிவ்ரெட்லி ஆமை இறந்து கரை ஒதுங்கி கிடந்தது. இது சுமார் 3 அடி நீலமும், 2 அடி அகலமும் இருந்தது.

    இதையடுத்து வனத்துறை மற்றும் கடல் ஆமைகள் பாதுகாப்பு இயக்குனர் சுப்ரஜா தாரணி ஆகியோர் கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது நீலாங்கரை கபாலீஸ்வரர் கடற்கரையில் ஆமைகள் முட்டையிட்டு சென்றிருப்பது தெரிந்தது. அதனை பாதுகாப்பாக எடுத்தனர். மொத்தம் 132 முட்டைகள் சேகரிக்கப்பட்டது.

    இது குறித்து சுப்ரஜா தாரணி கூறும்போது, “ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஆமைகளின் இனபெருக்க காலம் ஆகும். சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகள் கடற்கரை மணற்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைத்து குழி தோண்டி பாதுகாப்பாக மூடி வைக்கப்படும்.

    குளிர் காலத்தில் 52 நாட்களிலும், கோடை காலத்தில் 45 நாட்களுக்குள்ளும் குஞ்சு பொறித்து தானாக வெளியே வந்து கடலுக்குள் சென்று விடும்” என்றார்.
    Next Story
    ×