என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கலசப்பாக்கம் அருகே தந்தை-அக்காள் கொலை: வாலிபர் கைது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கோவில்மாதி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 65). ஓய்வு பெற்ற தபால் ஊழியர்.
இவருக்கு கல்யாணி (35), சித்ரா (24) என்ற 2 மகள்களும் சிவநேசன் (30) என்ற மகனும் இருந்தனர்.
கல்யாணி திருமணமாகி கணவரை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார்.
சிவநேசன் கோவில்மாதி மங்கலம் தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டு மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இதனால் சிவநேசனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தபால் நிலைய வேலையையும் இழந்தார்.
ராமச்சந்திரன், கல்யாணி, சித்ரா, சிவநேசன் 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இன்று காலை சிவநேசன் டீ குடிக்க பணம் கேட்டுள்ளார். அப்போது ராமச்சந்திரனுடன் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சிவநேசன் வீட்டில் உள்ள அம்மிக்கல்லை தூக்கி ராமச்சந்திரன் தலையில் போட்டார். இதனை தடுக்க வந்த கல்யாணியையும் தாக்கினார். கீழே விழுந்த அவரது தலையிலும் அம்மிகல்லால் தாக்கினார்.இதில் படுகாயமடைந்த ராமசந்திரன், கல்யாணி இருவரும் வீட்டிற்குள்ளேயே இறந்தனர்.
சித்ராவை தாக்க வந்தார். அவர் பயந்து வெளியில் ஓடி விட்டார். அதற்குள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர்.
தந்தை மகள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். பின்னர் அவர்களை கொலை செய்த சிவநேசனை மடக்கி பிடித்தனர்.
இது குறித்து கடலாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலையான தந்தை, மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிவநேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்