என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை கடற்படை அட்டூழியம் - மீன்பிடிக்க சென்ற 4000 தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு
Byமாலை மலர்7 Jan 2018 11:13 AM GMT (Updated: 7 Jan 2018 11:13 AM GMT)
கச்சத்தீவு அருகில் கடலில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை விரட்டி அடித்ததுடன், அவர்களது படகுகளையும், மீன்பிடி வலைகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்து வைத்துள்ளனர்.#TNfishermenisue #Srilankannavy
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து கச்சத்தீவு பகுதி அருகில் மீன்பிடிக்க 800-க்கு மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் நேற்று சென்றனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அங்கிருந்து திரும்பி செல்லும்படி மீனவர்களை விரட்டி அடித்தனர். அத்துடன், மீன்பிடிப்பதற்காக கொண்டு சென்ற மீன்பிடி வலைகளை பறித்துக் கொண்டனர். மேலும், 100க்கு மேற்பட்ட மீன்பிடி படகுகளையும் பிடித்து வைத்துக் கொண்டனர்.
இதையடுத்து, மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் அங்கிருந்து திரும்பி வந்துவிட்டோம். தொடர்ந்து தமிழக மீனவர்களளிடம் இலங்கை கடற்படையினர் அத்துமீறி நடந்து வருவதற்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காணவேண்டும் என மீனவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 4-ம் தேதி தங்கச்சிமடம் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. #TNfishermenisue #Srilankannavy #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X