என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை
Byமாலை மலர்7 Jan 2018 4:34 AM GMT (Updated: 7 Jan 2018 4:34 AM GMT)
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம், பாம்பன் பகுதிளை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் நேற்று கடலுக்கு சென்றனர். இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் இங்கு மீன்பிடிக்கக்கூடாது. உங்கள் பகுதிக்கு செல்லுங்கள் என்று எச்சரித்தனர்.
மேலும் மீனவர்களின் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்கள், வலைகளை சேதப்படுத்தினர். இதனால் மீனவர்கள் வழக்கம் போல் அவசர அவசரமாக கரை திரும்ப முற்பட்டனர். அப்போது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. விரட்டியடிக்கப்பட்ட மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர்.
கரை திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள் கூறும்போது, இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர், இது சர்வதேச எல்லை. அதனால் மீன் பிடிக்க அனுமதி இல்லை என்று கூறி, விரட்டியடித்தனர். இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலால் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியவில்லை என்றனர்.
ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் நேற்று கடலுக்கு சென்றனர். இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் இங்கு மீன்பிடிக்கக்கூடாது. உங்கள் பகுதிக்கு செல்லுங்கள் என்று எச்சரித்தனர்.
மேலும் மீனவர்களின் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்கள், வலைகளை சேதப்படுத்தினர். இதனால் மீனவர்கள் வழக்கம் போல் அவசர அவசரமாக கரை திரும்ப முற்பட்டனர். அப்போது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. விரட்டியடிக்கப்பட்ட மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர்.
கரை திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள் கூறும்போது, இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர், இது சர்வதேச எல்லை. அதனால் மீன் பிடிக்க அனுமதி இல்லை என்று கூறி, விரட்டியடித்தனர். இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலால் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியவில்லை என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X