search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் வழங்கினார்:  இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்
    X

    பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் வழங்கினார்: இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்

    பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இன்று (சனிக்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு கோடியே 84 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதற்காக ரூ.210 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டை உடைய குடும்பங்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகிய 1 கோடியே 84 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இரண்டு அடிநீளக் கரும்புத்துண்டு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிடும் அடையாளமாக 7 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடங்கிவைத்தார்.

    பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றவர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துக்கொண்டார்.

    சென்னையில் முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் சனிக்கிழமை (இன்று) முதல் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்களால் தொடங்கி வைக்கப்பட்டு வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கார்டுகளை பிரித்து 3 நாட்கள் வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. எந்த நாளில் யார்? யார்? பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என்ற விவரம் ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டிருக்கும்.
    Next Story
    ×