search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் ரூ.9 கோடி நிதி நிறுவன மோசடி - எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
    X

    வேலூரில் ரூ.9 கோடி நிதி நிறுவன மோசடி - எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

    நிதி நிறுவனம் நடத்தி ரூ.9 கோடி மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டு தருமாறு பொதுமக்கள் வேலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாழைப்பந்தல் மற்றும் செய்யாறு பகுதியை சேர்ந்த 14 பேர் பொருளாதார குற்றப்பிரிவு பேலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

    வாழைப்பந்தல் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 45). என்பவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார். நிதி நிறுவனம் ஒன்று தொடங்கி அதில் எங்கள் பகுதியை சேர்ந்தவர்களிடம் எனது நிதி நிறுவனத்தில் டெபாசிட் பணம் செய்தால் அதிக வட்டி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறினார்.

    இதையடுத்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 164 பேர் ஒரு லட்சம் முதல் 6 லட்சம் வரை பணம் டெபாசிட் செய்திருந்தோம்.

    டெபாசிட் பணத்திற்கான காலகெடு முடிந்த சிலர் ஏகாம்பரத்திடம் பணம் கேட்டு வந்தனர். 6 மாத காலமாக பணம் தந்துவிடுவதாக கூறி காலம் தாழ்த்தி வந்தார்.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக ஏகாம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகம் பூட்டிய நிலையில் உள்ளது. அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது அந்த எண் இணைப்பில் இல்லை.

    எனவே எங்களது பணம் சுமார் 9 கோடி ரூபாய் எடுத்து கொண்டு தலைமறைவாகி உள்ளார். அவரை கண்டு பிடித்து எங்களது பணத்தை மீட்டு தருமாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது.
    Next Story
    ×